தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பயணம் செய்த ரெயிலில் மதுபோதையில் ரகளை; 5 பேர் கைது

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பயணம் செய்த ரெயிலில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மதுரா,

நிஜாமுதீனில் இருந்து இந்தூர் நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதில் டெல்லி மற்றும் குர்காவன் நகரை சேர்ந்த 5 பேர் ஏ.சி. பெட்டி ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.

அதற்கு அடுத்த பெட்டியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பயணம் செய்துள்ளார். அவர் கோட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், அந்த 5 பேரும் மதுபானம் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் தனது தனி உதவியாளர் ராகவேந்திராவை அனுப்பி என்னவென்று விசாரிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவரிடம் 5 பேரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் கூறும்படி ராகவேந்திராவிடம் பிர்லா கூறினார்.

இதனிடையே ரெயில், உத்தர பிரதேசத்தின் மதுரா நகருக்கு வந்தடைந்தது. அங்கு ரெயில்வே போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டோம் என அவர்கள் ஒப்பு கொண்டனர். அவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து