தேசிய செய்திகள்

தொடர் கனமழை காரணமாக நிரம்பி வழியும் சிக்கஜாஜூர் தடுப்பணை

தொடர் கனமழை காரணமாக சிக்கஜாஜூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

தினத்தந்தி

சித்ரதுர்கா;

சித்ரதுர்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வந்தது. இந்த தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், சித்ரதுர்கா அருக லம்பானிஹட்டி கிராமத்தில் உள்ள சிக்கஜாஜூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.

மேலும் அந்த தடுப்பணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதனால் அருகே உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளன. அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தடுப்பணைக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

மேலும் ஏராளமான வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். சிக்கஜாஜூர் தடுப்பணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு