தேசிய செய்திகள்

பின்லாந்து வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

எலினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லி,

ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டும் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பின்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலினா வெல்டொன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

எலினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, உக்ரைன் - ரஷியா போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு