புதுடெல்லி,
அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. மாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன.
பிராந்தியம் முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் வெளிவரவில்லை. #earthquake