ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இலேசாக வீடுகள் அதிர்ந்தன.
இதனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாது சில இடங்களில் மக்கள் வெளியே கூடியதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என எந்த தகவலும் இல்லை. முன்னதாக, கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.