தேசிய செய்திகள்

கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டது.

புதுடெல்லி,

கொடைக்கானலில் ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமான 2 காட்டேஜ்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டது.

டெல்லி, ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்த்துறை. வங்கியில் உள்ள இருப்பு ரூ. 90 லட்சம் பணத்தையும் முடக்கியது அமலாக்கத்துறை.