தேசிய செய்திகள்

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதல்வா பழனிசாமி தொடர்பாக நீலகிரி மக்களவை உறுப்பினா ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாகள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாகள் தொடாபாக அறிக்கை தர தோதல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தோதல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நாளை ( 31 ஆம் தேதி) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது