தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே?

மராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆதித்ய தாக்கரே ஆதிக்கம் செலுத்துவாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் பால் தாக்கரேயும் சரி, அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் சரி தேர்தலில் போட்டியிட விரும்பியது இல்லை. இப்போதுதான் முதன்முதலாக மூன்றாம் தலைமுறை தலைவராக, சிவசேனாவின் இளைஞர் அணியாக திகழ்கிற யுவசேனாவின் தலைவராக இருக்கிற ஆதித்ய தாக்கரே மராட்டிய சட்டசபை தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.

அவர் முதன்முதலாக களம் காண்கிற மும்பை வொர்லி தொகுதி, அவரால் பரபரப்பாகி இருக்கிறது.