தேசிய செய்திகள்

ராகுல்காந்தி பயணித்த விமானத்தில் என்ஜின் கோளாறு

டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு ராகுல் காந்தி சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.

தினத்தந்தி

பாட்னா,

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் ராகுல்காந்தி சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் டெல்லிக்கே விமானம் திரும்பியது. இதனால், பீகார், ஒரிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் தாமதமாகும் எனவும் அசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை