தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியத்தின் பதவிக்காலமும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் பதவிக்காலம் வரை அவர் பதவியில் நீடிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக 6 ஆண்டுகள் பதவி வகித்த சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில்தான் அவருக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியத்தின் பதவிக்காலமும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான பிவிஆர் சுப்ரமணியம் கடந்த 2023 ஆம் ஆண்டு நிதி ஆயோக் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்துடன் அவர் நியமிக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து மேலும் ஒராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்