தேசிய செய்திகள்

ஆய்வு கூடத்தில் வெடி விபத்து: விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம்

ஆய்வு கூடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் நேற்று குப்பைகளில் கிடந்த வெடிப்பொருட்களை ஆய்வு செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஸ்ரீநாத், நவ்யா உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். வெடிப்பொருட்களில் வேதிப்பொருட்களை கலந்து ஆய்வு செய்தபோது, திடீரென்று வேதிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் விஞ்ஞானிகள் உள்பட 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து மடிவாளா விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு