தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பட்டாசு வெடித்த போது கோஷ்டி மோதல்; ஒருவர் கொலை

உத்தரபிரதேசத்தில் பட்டாசு வெடித்த போது கோஷ்டி மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் சாமிளி மாவட்டத்தில் உள்ள சிவ் காலனி பகுதியில் நேற்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததால் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கற்களால் மாறி மாறி வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலில் சஞ்சீவ் சைனி, ராகுல் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சஞ்சீவ் சைனி பரிதாபமாக உயிரிழந்தார். ராகுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு வெடித்த போது கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து