புதுடெல்லி,
துணை ஜனாதிபதி அமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த பதவிக்கான தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் துணை ஜனாதிபதி அமீது அன்சாரிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.