தேசிய செய்திகள்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; ஜே.பி.நட்டா நம்பிக்கை

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்குவங்காள சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள பர்த்வான் என்ற இடத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற ஜே.பி.நட்டா பேசுகையில்,

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும். மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பா.ஜ.க.வை அரியணையில் அமர வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்களை பெயரை மாற்றி மம்தா அரசு செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய ஜே.பி.நட்டா, 29 மாநிலங்களில் வேளாண் வளர்ச்சியில் பின்தங்கி மேற்குவங்காளம் 24-வது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க பா.ஜ.க.வை ஆதரியுங்கள் என்று தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை