கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் தொடர்பாக, கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவர்னர் மாளிகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புகார் தெரிவித்த அந்த பெண் நேற்று நீதிபதி முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது அந்த பெண் மே 2-ந் தேதி கவர்னர் மாளிகையில் தன்னை வெளியேற விடாமல் 3 அதிகாரிகள் தடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது