தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு குடோன் வெடித்தது; 4 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு குடோன் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

அனகாபள்ளி,

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அரிபகா பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட சின்ன யத்த பாலம் பகுதியருகே பட்டாசு குடோன் ஒன்று அமைந்து உள்ளது. இதில், தொழிலாளர்கள் பலர் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 4 பேர் இன்று காலையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளனர். இதில், திடீரென நெருப்பு பறந்து பட்டாசு குடோனில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் குடோனில் இருந்த பட்டாசு வெடிமருந்துகள் வெடித்து உள்ளன.

இதில் சிக்கி கொண்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி சென்று பாதுகாப்புடன் 4 பேரையும் தீ விபத்தில் இருந்து மெதுவாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதில், சங்கர் ராவ் (வயது 38), கமலம்மா (வயது 38), மகேஷ் மற்றும் பிரசாத் என 4 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த பட்டாசு வெடிவிபத்து பற்றி சபாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்