தேசிய செய்திகள்

மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை தீயணைப்பு வீரர் ஒருவர் காப்பாற்றினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் தீப்பிடித்த கட்டிடத்துக்குள், ராஜேஷ் சுக்லா என்ற தீயணைப்பு வீரர் முதல் நபராக நுழைந்தார். மீட்புப்பணியில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், அவர் ஒருவரே 11 பேரை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.

பின்னர், டெல்லி லோக்நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்தார்.

பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில், தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, உண்மையான கதாநாயகன். காயத்தை பொருட்படுத்தாமல், கடைசிவரை பணியாற்றி உள்ளார். இந்த துணிச்சலான வீரருக்கு வணக்கம் என்று சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து