தேசிய செய்திகள்

மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு: கைதான நபருக்கு 14 நாள் காவல்

மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைதான நபரை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தினர். அவர்களை நோக்கி ஒரு வாலிபர் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு மாணவர் காயமடைந்தார்.

அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் சிறுவன் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. அவரை நேற்று சிறார் நீதி வாரியம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் பாதுகாப்பு காவலில் வைக்க வாரியம் உத்தரவிட்டது. அவரது வயதை சரிபார்க்க எலும்பு பரிசோதனை நடத்த மருத்துவ குழுவை அமைக்குமாறு சிறார் நீதி வாரியத்தை போலீசார் கேட்டுக் கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்