தேசிய செய்திகள்

லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 5 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 266 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவர்களின் உடலில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிவதற்காக, அந்த 5 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்