தேசிய செய்திகள்

பெங்களூரு-சிட்னி இடையே நேரடி விமான சேவை

பெங்களூரு - சிட்னி இடையே நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு-சிட்னி இடையே நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தை விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். புதிய விமான சேவை குறித்து கன்டாஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரு டேவிட் கூறும்போது, 'பெங்களூரு-சிட்னி இடையில் இயக்கப்படும் நேரடி விமானம் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இந்த விமானம் பெங்களூருவில் இருந்து புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் இயங்கும்' என்று கூறினார். பெங்களூரு விமான நிலைய வளர்ச்சி அதிகாரி ரகுநாத் கூறும்போது, 'பெங்களூரு-சிட்னி இடையே நேரடி விமானம் இயக்கப்படுவது வரலாற்று சிறப்புமிக்க தருணம்' என்றார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை