தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் விமான தொழிலுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு

நடப்பு நிதியாண்டில் விமான தொழிலுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என்று தொழில் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்திய விமான தொழில்துறை ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.26 ஆயிரம் கோடிவரை நிகர இழப்பை சந்திக்கும் என்று தொழில் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது.

அந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விமான எரிபொருள் விலை உயர்வும், பயண கட்டண உச்சவரம்பு உயர்வும் விமான நிறுவனங்களின் லாபத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. அதனால், விமான தொழிலுக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.26 ஆயிரம் கோடிவரை நிகர இழப்பு ஏற்படும்.

விமான நிறுவனங்களின் கடன் சுமை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உயரும். நடப்பு நிதியாண்டில் இருந்து 2023-2024 நிதியாண்டு வரை விமான நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.47 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை