தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 86 வயதான அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா

கல்விக்கு வயது ஒரு தடை அல்ல. இதை நிரூபித்து இருப்பவர், ஒரு சாமானியர் அல்ல. அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓ.பி.சவுதாலா.

தினத்தந்தி

10-ம் வகுப்பு தேர்வு

இவர் 86 வயதான நிலையில், சிர்சாவில் ஆர்ய கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த 10-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வினை எழுதினார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

டெல்லி திகார் சிறையில் இருந்தபோது 2 வருடங்களுக்கு முன் நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினேன். அப்போது ஆங்கில பாட தேர்வு நான் எழுதவில்லை. இந்த நிலையில் தற்போது அந்த தேர்வை நான் எழுதி உள்ளேன். நான் இளம் வயதில் நிறைய படிக்க முடியவில்லை. ஆங்கில வார்த்தைகளை கவனமுடன் கவனிப்பேன். அவற்றை எழுதியும் வைப்பேன். அது இப்போது எனக்கு உதவி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவிய மாணவி

சவுதாலா இந்த தேர்வு எழுத உதவியாக இருந்தவர், சிர்வா பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி மல்கியாத் கவுர் ஆவார்.சவுதாலா தேர்வு எழுதியது பற்றி இவர் குறிப்பிடுகையில், அவர் தேர்வுக்கு நன்றாக தயாராகி இருந்தார். அவரது ஆங்கில உச்சரிப்பு மிக நன்றாக இருக்கும். இந்த பாடத்தில் அவர் நல்ல மதிப்பெண்களை பெறுவார் என கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து