தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் பதவி ஏற்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங். தலைவருமான மன்மோகன் சிங், இன்று முறைப்படி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்மோகன் சிங்கின் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்