தேசிய செய்திகள்

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவுக்கு மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவுக்கு மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்பை,

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர், ராணுவ மந்திரியாகவும் இருந்து உள்ளார். 80 வயதான முலாயம் சிங் யாதவுக்கு வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவருக்கு நெருங்கிய ஒருவர் கூறுகையில், முலாயம் சிங் யாதவ் கடந்த 3 நாட்களுக்கு முன் மும்பை வந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்ததாக தெரிவித்தார்.

சிகிச்சை முடிந்து நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து முலாயம் சிங் வீடு திரும்பினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு