தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; 4 பேர் பலி

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் இறந்துள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் ராணுவ நிலை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ போர்ட்டர்களான மன்சூர் அகமது, இஷாக் கான் ஆகியோர் சிக்கி இறந்தனர்.

ஸ்ரீநகர் மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மின்சார கோளாறை ஊழியர் சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மின் கம்பத்தில் இருந்து விழுந்து இறந்து போனார். ஸ்ரீநகர் ஹாபாக் பகுதியில் பனியால் எடை அதிகரித்து ஒரு மரக்கிளை முறிந்து விழுந்ததில் நடந்து சென்ற ஒருவர் இறந்தார். இதில் ஒரு காரும், ஆட்டோவும் நொறுங்கியது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்