தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு பிரதமர் மோடியை சந்திக்க 4-வது முறையாக அனுமதி மறுப்பு

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு பிரதமர் மோடியை சந்திக்க 4-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #PinarayiVijayan #PMModi

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்க மறுத்த பிரதம அலுவலகம், தேவைப்பட்டால் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அனைத்துக்கட்சிகள் குழு பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி மறுத்த பிரதமர் அலுவலகம், தேவைப்பட்டால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது.

இதற்கிடையே பினராய் விஜயன், ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்க விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநில முதல்வர் அலுவலக தகவலின்படி பிரதமரை சந்திக்க ஜூன் 16 மற்றும் 21-ம் தேதிகளில் நேரம் கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் அலுவலகம் அதனை நிராகரித்துள்ளது.

முன்னதாகவும் பிரதமர் அலுவலகம் கேரள மாநில அனைத்துக் கட்சி குழுக்களுக்கு அனுமதியை மறுத்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்