தேசிய செய்திகள்

ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரண பக்தர்களுக்கு ஜனவரி 2022-ம் ஆண்டுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இதர நாட்களில் தினமும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படும். இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு