தேசிய செய்திகள்

சபரிமலையில் காவலர்களுக்கு இலவச உணவு நிறுத்தம் - அரசு உத்தரவால் அதிர்ச்சி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சபரிமலை,

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

15 நாள்கள் தங்கி பணியாற்றும் அவர்களுக்கு தேவசம்போர்டு சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக தேவசம் போர்டுக்கு வருவாய் குறைந்ததால் அந்த செலவை அரசே ஏற்று வந்தது.

இந்த ஆண்டு முதல் காவலர்களுக்கு இலவச உணவு கிடையாது எனவும், அவர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறை அமைப்புகள் முதல் மந்திரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்