தேசிய செய்திகள்

சரக்கு வாகனம் - பைக் மோதல்; சிறுவன் உள்பட 3 பேர் பலி

சரக்கு வாகனம் - பைக் மோதிய விபத்தில் சிக்கி சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டம் கப்ரால் பகுதியில் ஒரு சரக்கு வாகனம் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. உடனே, மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்துக் கொண்டது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற அனில் பிரஜாபதி (வயது 25), அவருடைய நண்பர் பிஜ்ஜு (17), 4 வயது சிறுவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்