தேசிய செய்திகள்

ஜி-20 உச்சிமாநாடு: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை - டெல்லி அரசு உத்தரவு

டெல்லியில் செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் வருகை தர உள்ளனர்.

இதனை முன்னிட்டு டெல்லியில் செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை