தேசிய செய்திகள்

காந்தி ஜெயந்தி: புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் மூடல்

உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள், சாராயக் கடை, கள்ளுக்கடை போன்றவை வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படும்.

அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 2-ந்தேதி(நாளை) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது. உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து