தேசிய செய்திகள்

‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:-

மத்திய அரசு ஆணவத்தை விட்டொழித்து, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின்போது, பெட்ரோல், டீசல் மீதான அதிக வரியைக் குறைப்பதன் மூலம் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தலாம் என்று நரேந்திர மோடி கூறியதைத்தான் தற்போது செயல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

உலகளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்துவருகையில் இந்தியாவில் அது அதிகரித்து வருவது அவமானம்.

கடந்த 20 நாட்களில் 14 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை