தேசிய செய்திகள்

‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது

‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள குலப்புரா ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் கணேஷ்லால் ஜெயினிடம் பயணி ஒருவர் 4 தட்கல் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு ரூ.1600-ஐ லஞ்சமாக தந்தால் டிக்கெட் கொடுப்பதாக கணேஷ்லால் ஜெயின் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பயணி லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கணேஷ்லால் ஜெயின் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்