தேசிய செய்திகள்

"ஆண்டுக்கு இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்கள்": நிதி ஒதுக்கியது கோவா அரசு

கோவாவில் வீடொன்றுக்கு ஆண்டுதோறும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பனாஜி,

கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற பிரமோத் சாவந்த், ஏப்ரல் மாதம் முதல் இலவச கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோவா சட்டமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க ஆண்டொன்றுக்கு 40 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.