தேசிய செய்திகள்

பைக் மீது மோதாமல் தவிர்க்க லாரி மீது மோதி விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 4 பேர் பலி - உ.பி.யில் அவலம்

அரசு பஸ் விபத்தில் சிக்கியதில் 21 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

ஹத்ராஸ்,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சாமமை கிராமத்தில் அலிகார்-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அலிகார் நகரில் இருந்து ஹத்ராஸ் நோக்கி சென்ற அந்த பஸ், சாலையில் சென்ற பைக் ஒன்றின் மீது மோதி விடாமல் தவிர்ப்பதற்காக அதன் ஓட்டுநர் பஸ்சை திருப்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. எனினும், பஸ்சில் இருந்த சில பயணிகள் கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சின் அடியில் சிக்கிய ஒரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு