சென்னை,
பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை சந்திக்கிறார். தமிழக அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.