தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் கையெறி குண்டுகள், வெடி மருந்துகள் கண்டெடுப்பு

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கையெறி குண்டுகள், வெடி மருந்துகள் கண்டெடுக்கப்பட்டன.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள காட்டுப் பகுதியில் வெடி மருந்துகள் மற்றும் வெடிகுண்டுகள் கிடப்பதாக, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் 3 கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டனர். இதையடுத்து அதனை பத்திரமாக மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பா மற்றும் கதுவா மாவட்ட எல்லையில் சமீபத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது இந்த வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்