கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு

குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் படிதார் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வந்தவர், ஹர்திக் படேல். பின்னர், காங்கிரசில் சேர்ந்த அவர், அதிலிருந்து விலகி, கடந்த நவம்பர் மாதம் பா.ஜனதாவில் சேர்ந்தார். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பு, சுரேந்திரநகர் மாவட்டம் ஹரிபார் கிராமத்தில் அவர் கூட்டம் நடத்த அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. ஆனால், நிபந்தனைகளை பின்பற்றாமல், அரசு உத்தரவை மீறியதாக அவர் மீது திரங்கத்ரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட் டி.டி.ஷா, ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்