தேசிய செய்திகள்

குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்பு

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேரின் உடல்கள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே ஜசுபென் வதேல்(58), அவரது சகோதரிகள் சாந்தாபென் வதேல்(53) மற்றும் கவுரிபென் மாவத்(55) மற்றும் கவுரிபென்னின் கணவர் ஹீராபாய்(60) ஆகிய 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் உறங்கச் சென்றுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஜசுபென்னின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது 4 பேரும் சுயநினைவின்றி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களது வீட்டில் எரிவாயு மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர் ஓடிக்கொண்டிருந்தால், வாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இது குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு