தேசிய செய்திகள்

ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி சர்ச்சை கருத்து - காங்கிரசார் கண்டனம்

ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

குஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கன்பத் வசவா நேற்று சூரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என காங்கிரசார் அழைப்பதை கிண்டல் செய்து பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ராகுல் காந்தி சிவனின் ஒரு அவதாரம் என காங்கிரசார் கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற சிவன் விஷம் அருந்தினார். அதைப்போல காங்கிரசாரும், ராகுல் காந்தியை லிட்டர் (500 மில்லி) விஷம் அருந்தச்செய்ய வேண்டும். அதில் அவர் உயிரோடு இருந்தால், ராகுல் காந்தி உண்மையிலேயே சிவனின் அவதாரம்தான் என நாங்கள் நம்புகிறோம் எனறு கூறினார்.

இது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி பற்றிய இந்த கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி, இது பா.ஜனதாவின் உண்மையான குணநலன்களை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து