தேசிய செய்திகள்

எல்லையில் துப்பாக்கி சண்டை: பாகிஸ்தான் படையினர் 2 பேர் சுட்டுக்கொலை - இந்திய ராணுவம் அதிரடி

எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு எல்லைக்கு அப்பால் இருந்து அத்துமீறிய தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவும் வகையில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.

அதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிசண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அதே சமயம் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு