தேசிய செய்திகள்

டெல்லி ராஜபாதை மறுசீரமைப்பு: மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அடிக்கல் நாட்டினார்

டெல்லி ராஜபாதையை ரூ.477 கோடியில் மறுசீரமைப்பு செய்வதற்காக, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அடிக்கல் நாட்டினார்

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் பகுதிக்கு இடையிலான ராஜபாதையின் மறு சீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அத்திட்டத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இதன்படி மத்திய அரசின் சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதுடன், டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் இடையில் உள்ள 3 கி.மீ. தூர ராஜபாதையும் மறுசீரமைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின்போது இந்த ராஜபாதையில்தான் அணிவகுப்பு நடைபெறும். இந்த திட்டத்தின் கீழ் ராஜபாதையில் பெரியளவில் கற்கள் பதிப்பது, சுரங்கபாதை வசதி, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ராஜபாதை மறுசீரமைப்பு பணியை ஷாபூர்ஜி பல்லோனி நிறுவனம் ரூ.477.08 கோடி மதிப்பீட்டில் செய்கிறது.

இந்நிலையில் ராஜபாதையை மறுசீரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்தியா கேட் புல்வெளியில் நேற்று நடந்தது. இதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். ராஜபாதை மறுசீரமைப்பு பணியை 2022-ம் ஆண்டு குடியரசு தினத்துக்குள் முடித்து அந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பை புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து