Image Courtacy: ANI 
தேசிய செய்திகள்

நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்: அரியானா முதல்-மந்திரி

நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சண்டிகர்,

அரியானாவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிக்கு 'நாட்டு மாடு' வாங்க ரூ.25,000 வழங்கப்படும். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் சுமார் 2,800 பேருக்கு நாட்டுப் பசு மாடு வாங்கும் திட்டத்துக்குப் பதிவு பதிவு செய்துள்ளனர். நாங்கள் 'பசு கிசான் கிரெடிட் கார்டு' என்ற புதிய திட்டத்தையும் தொடங்கினோம். அதில் இதுவரை 42,000 கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன" என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது