Photo Credit: twitter/ @MEAIndia 
தேசிய செய்திகள்

உக்ரைனின் ’சுமி’ நகரில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களும் வெளியேற்றம்: வெளியுறவுத்துறை

உக்ரைனின் ‘சுமி’ நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனின் சுமி நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

சுமி நகரில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் மீட்டு விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மீட்கப்பட்ட மாணவர்கள் போல்டவா நகருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து மேற்கு உக்ரைனுக்கு ரெயில் மூலம் வருவார்கள் எனப்பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி, சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணி தொடர்பாக ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு