தேசிய செய்திகள்

குஜராத்: வெப்பக்காற்றின் அளவு உயருகிறது

குஜராத்தில் வெப்பகாற்றின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

காந்திநகர்,

இந்தியாவின் வானிலை ஆராய்ச்சிமையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குஜராத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப காற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்றும் மழை பொழிவதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று வெப்ப காற்றின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பல இடங்களில் 44 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பநிலை நிலவுகிறது.

வடமேற்கு திசையிலிருந்து தென்மேற்கு திசையில் காற்று மாறி வீசுவதால், நாளை மற்றும் நாளை மறுநாள் வெப்ப அளவு குறையும் என்றும் எனினும் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மீண்டும் உயர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஹமதாபாத் பகுதிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுரேந்திரா நகரின் வெப்பநிலை நேற்று (வியாழக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலையாக 45.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.

இடார் மற்றும் கண்ட்லா விமான நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலையாக 44 டிகிரி செல்சியஸ் பதிவானதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

குஜராத் தவிர, பஞ்சாப், ஹரியானா, வடக்கு புதுடெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதிக வெப்பகாற்றின் அளவு உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடஇந்தியா முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப காற்றின் தாக்கம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை