கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மேற்கு ராஜஸ்தானில் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்: வட இந்தியாவில் நீடிக்கும் வெப்ப அலை..!

மேற்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் நாளை வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அகமதாபாத்,

ராஜஸ்தானில் பெரும்பாலான இடங்களில் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு முதல் எட்டு டிகிரி வரை அதிகமாக பதிவாகியுள்ளது. புதன் பார்மரில் 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது, ஸ்ரீ கங்காநகர் இன்று 47.3 ஆக உள்ளது, பிகானர் 47.2 ஆகவும், சுரு கிட்டத்தட்ட 47 டிகிரியாகவும், அஜ்மீரில் 45 ஆகவும், உதய்பூர் 44 டிகிரியாகவும் உள்ளது.

மேற்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் நாளை வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதே போல மேற்கு, மத்திய மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளும் இந்த வாரம் முழுவதும் வெப்ப அலையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை