தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பீர்வா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசார், பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலையில் இருந்து கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதிகாம் பகுதியில் நேற்றிரவு மற்றொரு என்கவுண்ட்டர் சம்பவம் நடந்தது. இதுபற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்