கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் புதன்கிழமை வரும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல் வரும் 26 ஆம் தேதி கிழக்கு கடற்கரையில் ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் விதிக்கப்படவில்லை.

யாஸ் புயல் காரணமாக தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை