தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான போக்குவரத்து பாதிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் மலைப்பகுதிகள், ஜம்மு, லடாக் ஆகிய பிராந்தியங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக குப்வாராவில் 25 செ.மீ. பனிப்பொழிவு காணப்பட்டது.

இதனால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதியம்வரை எந்த விமானமும் தரை இறங்க முடியவில்லை. ஒரு தனியார் நிறுவனம், நேற்று முழுவதும் தனது விமானங்களை ரத்து செய்தது .

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை