தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 35 மாணவர்கள் காயம்

இமாச்சல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஷிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தின் கங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி சப்-டிவிஷன் என்ற இடத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மலைப்பாதை வழியாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 35 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில், தர்மசாலாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட பேரணி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து